இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தங்கள் படைகளை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்", எனவும் இஸ்ரேலிய படைகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும் நாளை அரசாங்கம் என்ற ரீதியில் முக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது இதேநேரம் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு ட்ரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதல்களைத் தொடர்வதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா நகரின் மேற்குப் பகுதிகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.